MyMenu1

Sunday, July 17, 2011

ஆறுவது சினம்

ஒரு அழகான ஊரில் அழகான ஒரு வீடு இருந்தது. அவ்வீட்டில் அன்பு என்று ஒரு பையனும் அவனுடைய தங்கை அனிதாவும் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர். அன்புக்கு எட்டு வயது. அனிதாவுக்கு நான்கு வயது.  ஒரு நாள் பள்ளி விட்டு வந்தபின்னர் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பொம்மை  காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த அன்பு வேறு ஏதோ எடுக்க உள்ளே சென்றான். அப்பொழுது ஆசையாக அவனுடைய காரை எடுத்த அனிதா அதை தெரியாமல் உடைத்துவிட்டாள். உள்ளிருந்து வந்த அன்பு உடைந்த காரைப் பார்த்தவுடன் கோபம் கொண்டான். "ஏன் என் கார உடைச்ச?" என்று கத்திகொண்டே வந்தவன் கீழே இருந்த அனிதாவின் பொம்மையை தூக்கி எறிந்தான். அது ஒரு மண்ணில் செய்த தஞ்சாவூர் பொம்மை. அழகான அந்த பொம்மை உடைந்து சிதறியது. தஞ்சாவூர் சென்ற பொழுது அவர்கள் அப்பா வாங்கிவந்தது. உடனே அனிதா அழ ஆரம்பித்தாள். பொம்மை உடைந்தவுடன் அன்புக்கு பாவமாக இருந்தது. தான் கோபப்படாமல் இருந்திருக்கலாம் என்று வருந்தினான். கோபத்தை அடக்கியிருந்தால் அழகான பொம்மை உடைந்திருக்காதே என்று நினைத்தான். அவ்வைப்பாட்டி கோபம் அடக்கப்படவேண்டும் என்பதற்குதான்   "ஆறுவது சினம்" என்று சொன்னதைப் புரிந்துகொண்டான்.

கோபத்தை அடக்க கற்று கொள்ளுங்கள் குழந்தைகளே!

1 comment:

  1. ஆறுவது சினம் என்ற கூற்றை அழகாக விளக்கும் அழுத்தமான கதை!!.

    ReplyDelete

I appreciate your valuable comments, Thanks!