MyMenu1

Monday, May 21, 2012

மழையின் இன்பம்

கருங்கொண்டல் கண்டு ஓடி ஒளிவதா
கானமயில் போல ஆடிக் களிப்பதா;
வெள்ளித்துளி வீழ்வது கண்டு குடை விரிப்பதா
இலையைப்போல் பூவைப்போல் லயித்து சிலிர்ப்பதா;
இத்தயக்கங்கள் விலக்கி மழைநீர் முகத்தில் ஏந்தி
வதனம் பூவாய் மலர உள்ளம் சிலிர்த்து
மனச்சிறகை விரித்து துள்ளி ஆடுவதல்லவா
இன்பம், மட்டற்ற இன்பம்!

7 comments:

  1. அற்புதமான பாடல் கிரேஸ். "கருங்கொண்டல்","வெள்ளித்துளி","வதனம்" என நீங்க பயன்படுத்தி இருக்கும் சொற்கள் சூப்பர் :-)

    ReplyDelete
  2. மழையெனும் மாவீரன்,
    கொடை சிந்தும் அழகு கண்டு,
    மயங்கி நின்ற சூரியமகள்,
    மெல்ல மெல்ல நெறுங்கி வந்து,
    மழைசிந்தும் வள்ளனை,
    தன்னறிவின்றி தொட,
    பிறந்தாள் வருணமகள் வானவில்!


    உன் கவி கண்டு என் மொழி சிலிற்கிறது! கவி பாட!
    உன்னோடு நானும் பாட!

    ReplyDelete
  3. அருமையான கவிதை Shaby!
    நல்ல கற்பனை, எங்கேயோ போய்ட்டிங்க போங்க :-)

    கவிதைக்கு கவிதை பதில்..ஆஹா! And good, I will have this forever! Thanks dear!

    ReplyDelete
  4. Both the poems - one by Grace and another by Shaby are really good. Good work poets!!!

    ReplyDelete
  5. Thanks a lot Dhiyana! Will convey this to Shaby too.. :-) theriyadhavangalukkum appreciate panra..great Dhiyana, proud to be your friend!

    ReplyDelete
  6. Thank you Sriram. Thank you Grace. :o). I am REALLY happy to get a friend like Grace!

    ReplyDelete

I appreciate your valuable comments, Thanks!